Friday, 2 August 2013

அம்மா அழைத்தால் மட்டும் நமக்கு அப்படி ஒரு அலட்சியம்!!!!



அம்மா அழைத்தால் மட்டும் நமக்கு அப்படி ஒரு அலட்சியம்!!!!

வீட்டுக் குக்கரின் விசில் சத்தத்திற்கு
விரைந்துச் செவிச் சாய்ப்பாள்...

வீதியில் செல்லும் வழிப்போக்கன்
வாய்மொழிக்கும் பட்டனெச் செவிச் சாய்ப்பாள் ..

தொலைவில் அழைக்கும் தொலைப்பேசியைத்
தேடித் தொடர்ந்துச் செவிச் சாய்ப்பாள்..

படபடவெனச் சரிந்து விழும் பாத்திர ஒலிக்கும்
பக்குவமாய் செவிச் சாய்ப்பாள்..

நிறைந்து வழியும் தண்ணீர் தாளத்திற்கும்
தவிப்போடு செவிச் சாய்ப்பாள்..

வண்டிச் சாவியைத் தேடும் மகனின் குரலுக்கும்
வடிவாய் செவிச் சாய்ப்பாள்..

தேநீர் தேடும் கணவனின் கட்டளைக்கும்
தெவிட்டாமல் செவிச் சாய்ப்பாள்..

புத்தகம் எங்கே எனும் மகளின் புலம்பலுக்கும்
புன்னகையுடன் செவிச் சாய்ப்பாள்..

நித்தம் நித்தம் எல்லோர் அழைப்பிற்கும் செவிச் சாய்த்து
நிறைவாய் சேவைச் செய்வாள்..

இவளின் அழைப்பிற்கு மட்டும் , " இதோ வருகிறேன் " என எப்போதும் பதில் கிடைப்பதில்லை ..

"இரும்மா வருகிறேன் " என்று மட்டுமே கிடைக்கும்...

No comments:

Post a Comment